×

கொல்லிமலையில் 3 நாள் டாஸ்மாக் கடைகள் மூடல்

 

நாமக்கல், ஜூலை 29: வல்வில் ஓரி விழாவையொட்டி, கொல்லிமலையில் 3 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார்.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் தமிழக அரசின் சார்பில் வரும் 2 மற்றும் 3ம் தேதிகளில் வல்வில் ஓரி விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்துகொள்வார்கள். விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திற்கு வரும் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லிமலை தாலுகாவில் உள்ள டாஸ்மாக் கடைகளை வரும் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை 3 நாட்கள் மூடுமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். செம்மேடு, காரவள்ளி, செங்கரை, சோளக்காடு ஆகிய 4 இடங்களில் செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடைகளும் 3 நாட்கள் மூடப்படும். எக்காரணத்தை கொண்டும், டாஸ்மாக் கடைகளை திறக்கவோ, மதுபானங்களை விற்பனை செய்யவோ கூடாது. மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

The post கொல்லிமலையில் 3 நாள் டாஸ்மாக் கடைகள் மூடல் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Kollimalai ,Namakkal ,Valvil Ori festival ,
× RELATED தொடர் மழை காரணமாக கொல்லிமலை அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிப்பு..!!